செய்தி: நிரல்
செப். 21 21:10

போதைப்பொருள் ஒழிப்புப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞன் கொலை-இரத்தினபுரியில் சம்பவம்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் மலையகத்தில் போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இரத்தினபுரி பாமன்கார்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப் பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை மணிநேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இளைஞன் கொலை செய்யப்பட்டபோது கடமையிலிருந்த இலங்கைப் பொலிஸார் ஒருவரும் கொலையின் பிரதான சூத்திரதாரியும் தலைமறைவாகியுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்குத் தேவையான உடைகளை அவர்களின் வீடுகளில் இருந்து சிலர் எடுத்துச் சென்றுள்ளனர்.
செப். 21 19:56

மட்டக்களப்பு தெய்லாமுனை பிரதேசத்தில் செங்கல் உற்பத்தி பாதிப்பு- பலர் தொழிலை இழந்தனர்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை அரசின் ஊக்குவிப்பு மற்றும் கடனுதவிகள் இல்லாமையினால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் விற்பனையாளர்களினால் பருவகாலத் தொழிலாக செய்யப்பட்டு வரும் செங்கல் உற்பத்தி முற்றாகவே தடைப்பட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர் சி. ரவிந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தெய்லாமுனை பகுதியில் இடம்பெறும் செங்கல் உற்பத்தியாளர்கள் பெரும்பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். செங்கல் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு மூலம்பொருட்கள் உட்பட இடைநிலைப் பொருட்கள் அனைத்துக்கும் கூலி கொடுத்துச் செய்யப்படுகின்றது.
செப். 21 18:13

சுட்டுக் கொல்கிறது ஆந்திரம் -அமைதியாகச் செல்கிறதா தமிழக அரசு?

(சென்னை, தமிழ்நாடு) ஆந்திர மாநிலத்தில் காடுகளில் வேலை செய்ய, இடைத்தரகர்களால் தமிழகத்தில் இருந்து அழைத்துச்செல்லப்படும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தமிழர்கள் கொல்லப்படுவதும், ஆந்திர சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2015இல் கொடூரமாக கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு உரிய நீதியே இதுவரை கிடைக்காத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பும் மீண்டும் தமிழர் ஒருவர் ஆந்திர வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள், ஆபத்து எனத் தெரிந்தும் இதுபோன்ற வேலைகளுக்கு துணிந்து செல்லும் பழங்குடியின தமிழர்களின் சமூக காரணிகளை, கூர்மைச் செய்தித் தளம் அலச விரும்புகிறது.
செப். 21 13:41

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். பத்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இலங்கை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
செப். 20 22:17

திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் காணிகளை மீட்டுத்தரமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் மூன்று ஏக்கர் காணியை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமது பாரம்பரிய காணி என்றும் மீளக்குடியமர பிரதேச மக்கள் விரும்பியபோதும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் சிலர் தடுத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகின்றனர். போர் காரணமாக தமது பிரதேங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்த நிலையில், மீளக்குடியமர்வதற்கு உதவியளிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுத்திருந்தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
செப். 20 22:15

தனித்தமிழ் அறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் சென்னையில் காலமானார்

(சென்னை, தமிழ்நாடு) தனித்தமிழியப் பேரறிவாளர் என தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்ட, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பன் வழக்கொன்றிற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (20.09.2018) வந்திருந்தபொழுது அங்கேயே காலமானதாக தமிழக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரட்சிக் கவி பாரதிதாசன் மீது மாறாத பற்றுக்கொண்டவர். மறைமலையடிகள் - பாவாணர் - பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழறிஞர்களின் வழியில் இறுதிவரை களப்பணியாற்றிய இவர், தமிழகம் மற்றும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்கள், தமிழ் வழிக் கல்விக்கான தொடர் போராட்டங்கள் என எல்லாவற்றிலும் தன் இறுதி மூச்சு வரை உறுதியுடன் களத்தில் நின்றவர் என சமூக, அரசியல் இயக்கத் தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
செப். 20 15:33

அம்பாறையில் பொதுமக்களின் 300 ஏக்கர் காணிகளில் இலங்கை இராணுவம், வன இலாக திணைக்களம்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரசின் வன இலாக திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சுமார் முந்நூறு ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை இராணுவம், இலங்கை வன இலகா திணைக்களம் உரிமை கோரியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செப். 20 09:18

மாங்கேணியில் கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது- மாணவர்களும் பங்கேற்பு

(மட்டக்களப்பு, ஈழம்) சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலில் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்புத் தினம் நேற்று புதன்கிழமை மாங்கேணியில் அனுஸ்ட்டிக்கட்டது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கரையோர பாதுகாப்புப்பிரிவின் நெறிப்படுத்தலின் மாங்கேணி கரையோரப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
செப். 19 13:35

முல்லைத்தீவில் கடும் வரட்சி, முப்பதாயிரம் குடும்பங்கள் பாதிப்பு- விவசாயச் செய்கைகள் நிறுத்தம்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணாயிரத்தி 103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரட்சி நிவாரணம் முதல் கட்டமாக ஆறாயிரத்தி 824 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏழாயிரத்தி 296 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. வரட்சி தொடருமாக இருந்தால் பயிர்ச்செய்கைகள் மோசமாகப் பாதிக்கப்படும். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நிலவும் கடும் வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப். 19 01:42

தமிழகம் உடன்குடியில் கடல்வழி முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்கள்

(சென்னை, தமிழ்நாடு) தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் அருகே உள்ள உடன்குடி கல்லாமொழியில், கட்டப்படும் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிடக்கோரியும் கப்பல்களில் கொண்டு வரப்படும் நிலக்கரி பொதிகளை இறக்குவதற்கு வசதியாக, கல்லாமொழி கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்த நீளத்திற்கு கட்டப்படும் பாலம் மற்றும் இறங்குதளம் பணியை நிறுத்திடவும் வலியுறுத்தி, 17.09.2018 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த திரேஸ்பரம், கால்லாமொழி, ஆலந்தலை, மணப்பாடு உட்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவர்கள், 380-திற்கும் அதிகமான படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடல் வழியாக இறங்குதளம் கட்டப்படும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.