செப். 19 01:42
(சென்னை, தமிழ்நாடு)
தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணம் அருகே உள்ள உடன்குடி கல்லாமொழியில், கட்டப்படும் அனல்மின்நிலைய திட்டத்தை கைவிடக்கோரியும் கப்பல்களில் கொண்டு வரப்படும் நிலக்கரி பொதிகளை இறக்குவதற்கு வசதியாக, கல்லாமொழி கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்த நீளத்திற்கு கட்டப்படும் பாலம் மற்றும் இறங்குதளம் பணியை நிறுத்திடவும் வலியுறுத்தி, 17.09.2018 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், தூத்துக்குடி கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த திரேஸ்பரம், கால்லாமொழி, ஆலந்தலை, மணப்பாடு உட்பட்ட 26 கிராமங்களைச் சோ்ந்த மீனவர்கள், 380-திற்கும் அதிகமான படகுகளில் கருப்புக்கொடி கட்டி கடல் வழியாக இறங்குதளம் கட்டப்படும் பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர்.