நவ. 19 03:06
இந்தியச் சிறைகள் 'சித்திரவதைக் கூடங்களாக' செயல்படுவதாக பலதரப்பட்ட மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு காலக்கட்டங்களில், அரசியல் கைதிகளே கூட உளவியல் நெருக்கடிக்கு உள்ளாவதும், தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதும் நிகழ்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சூழலியல் செய்ற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலரும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகாவும் செய்திகள் வந்தன. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் அவர்களிடம் இதுகுறித்தும் தமிழக சமூக செயற்பாட்டுக் களம் குறித்தும் கூர்மை செய்தித்தளம் விரிவான அலசலை மேற்கொண்டது.