ஜன. 07 17:43
(முல்லைத்தீவு, ஈழம்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்பார்வையில் இலங்கை முப்படைத் தளபதிகள், இலங்கை அரச உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் அமைச்சுக்களின் செயளலாளர்கள். மாகாண சபைகளின் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களின் ஆளுர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வடமாகாணத்திற்கான ஆளுநராக சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு;ள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.