ஜன. 11 11:57
(யாழ்ப்பாணம், ஈழம்)
தமிழர் தாயகத்தின் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் தற்போதும் தமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவர் இணைய தலைவர் என்.எம்.ஆலம் விசனம் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த 1 வருடத்துக்கு முன்னர் சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் ஆகியவற்றுக்கு தடைச் சட்டங்கள் ஏற்படுத்தப்ட்ட போதும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தற்போதும் வடமாகாணத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, சிலிண்டர் தொழில், மின் பாய்ச்சி மீன்பிடித்தல் உட்பபட்ட சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பபட்டுவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.