நிரல்
பெப். 17 11:03

சர்வதேச விசாரணை மூலம் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்றனவற்றுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பெப். 17 09:59

கிளிநொச்சி மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது - நீரியல்வளத் திணைக்களம் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை காரணமாக கடல்வளம் அழியும் அபாயம் காணப்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் அச்சத்துடன் கவலை வெளியிட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீரியல்வளத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெப். 16 22:15

வயலிலிருந்து மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை - கிளிநொச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தகவல்

(கிளிநொச்சி, ஈழம்) விவசாய நிலமான கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்திலிருந்து மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் நீண்ட காலம் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பனை மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணியில் இருந்து முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு தனது காணிக்குள் நிரப்பப்பட்டுள்ளதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெப். 16 21:40

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் - இளைஞன் பொலிஸாரால் கைது

(வவுனியா, ஈழம்) வவுனியா ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து தமிழ் இளைஞன் மீது இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.
பெப். 16 14:30

ஐக்கிய தேசியக் கட்சியா, ஐக்கிய தேசிய முன்னணியா? இளம் உறுப்பினர்களிடையே குழப்பம் - இரகசியச் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணிக்குள் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அதனை ஏற்றுள்ளனர். ஆனால் கட்சியின் இளைய உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பெப். 15 13:15

நந்திக்கடலில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றோர் மீது தாக்குதல்

(முல்லைத்தீவு, ஈழம்) இன அழிப்பு போரினால் அனைத்தையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதாரத்தின் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் முல்லைத்தீவு மீனவர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக விசனம் வெளியிட்டுவரும் நிலையில், நந்திக்கடல் நீரேரியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றவர்கள் மீது நேற்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெப். 15 10:53

போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விநியோகிப்பதாக முன்னாள் வடமாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் 639 கிராம் ஹெரோயினுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கலகெதரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப். 15 09:41

தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இருந்திருக்காது - செல்வம் கருத்துக்கணிப்பு

(மன்னார், ஈழம்) சர்வதேசத்தின் துணையுடன் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது செய்யப்பட்டதன் பின்னரான நிலையில், தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அடுத்த தலைமைப் பதவி யாருக்கு என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளதுடன், இதற்காக பலரும் போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருந்தால் கூட்டமைப்பு இன்று இல்லாது போயிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பெப். 14 22:53

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தது.
பெப். 14 15:20

வடமாகாணத்தைச் சாட்டியே மகிந்த அரசு சர்வதேசத்திடமிருந்து கடன் பெற்றது - பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித பலனும் இல்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணம் எனத் தெரிவித்து வடமாகாணத்தைக் காரணம் காட்டி சர்வதேசத்திலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையின் ஏழு மாகாணங்களை அபிவிருத்தி செய்த இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை இதுவரை அபிவிருத்தி செய்யவில்லை என இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதும் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.