செய்தி: நிரல்
மார்ச் 09 14:36

மைத்திரி-மகிந்த மோதல் - பேரணியில் அதிகளவு மக்கள் பங்குபற்றவில்லை; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி

(யாழ்ப்பாணம், ஈழம் ) மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை எட்டாம் திகதி கண்டியில் இடம்பெற்ற பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
மார்ச் 09 00:02

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை அனுமதியோம் - இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் லக்ஸ்மன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) போர்க்ககுற்ற விசாரணைகளை நடத்த சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விசாரணைக்கு இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறை பொருத்தமானது எனறும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தப் பிரேரணையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என மனித உரிமைச் சபையிடம் அரசாங்கம் கோரியுள்ளது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
மார்ச் 07 22:09

வரவுசெலவுத் திட்டத்தை தோற்றகடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த தரப்பு கூறுகின்றது

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவத் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள்வில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இதனால் மகிந்த ராஜபக்ச தரப்பு வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கலாமென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர்களிடம் கூறியள்ளாார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மார்ச் 07 00:50

வடமாகாண ஆளுநர் ஜெனீவா செல்வது அதிர்ச்சியளிக்கின்றது - வலிந்து காணாலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போரின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களின் போதும் இலங்கை இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துமாறும், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தமக்கு மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி வலிந்து காணாலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 06 23:30

இலங்கை அரச பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்- இரண்டு வருட கால அவகாசத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்க அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட ஏற்பாட்டில் இவர்கள் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த மூன்றுபோரும் ஜெனீவா பயணம் செல்லவுள்ளமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடவில்லை என்றும் இதனால் இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மார்ச் 06 06:59

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றலுக்கு நோர்வே 60 மில்லியன் குரோன் நிதியுதவி

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த தசாப்தங்களில் நிலவிய போர்க்காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்கு 60 மில்லியன் குரோன்களை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்ததாக கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.
மார்ச் 05 23:48

பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைப் படைகளைக் கௌரவிக்க இராணுவ வருடம் பிரகடனம்- மைத்திரி ஆலோசணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதாகத் தமிழ்தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஜெனீவா மனித உரிமைச் சபை மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த பத்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை இரவணுவத்தை கௌரவிக்கும் நோக்கில் இராணுவ நினைவு வருடத்தை பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை இராணுவத்தை நினைவு கூரும் இராணுவ வருடம் பிரகடனப்படுத்தப்படும் என இலங்கை இராணுவ அதிகார சபைத் தலைவர் ஜம்மிக்க லியனகே தெரிவித்துள்ளார். இது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறினார்.
மார்ச் 05 10:54

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார் - கண்டியில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக கூட்டமைப்பில் பிரதான கட்சியாக இருந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முரண்பட்டிருந்தனர்.
மார்ச் 04 23:29

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம்- ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரங்கள் போதியதாக இல்லை என்று மூத்த உறுப்பினர்களுடன் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில கூடவுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீட்டை தோற்றகடிக்க வேண்டும் எனவும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மார்ச் 04 22:14

நிவாரணம் வழங்க காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு- அலுவலகமே வேண்டாமென்கின்றனர் உறவுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் பரிந்துரை விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.