கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
மே 21 21:05

மீள் எழுச்சி பெறப்போகும் சிங்கள மேட்டுக்குடி அரசியல்- சர்வதேச அரங்கில் மீண்டும் தமிழ்த்தேசத்துக்கு வரப்போகும் ஆபத்து

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குப் பதவியில் இருந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துக்களை மறுத்துரைக்க முடியாது. ஊழல்மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் நீடிப்பதற்கும் அவை இலங்கை அரசின் ஒரு பகுதிபோன்று மாறுவதற்கும் முப்பது ஆண்டுகால போர் வழிவகுத்து என்பதே மூல காரணம். ஆனால் இதனைச் சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள முற்போக்குவாதிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதொரு சூழலில் சிங்களச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது முற்கால அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றார். எழுபது வருடகால இனப்பிரச்சினை மடைமாற்றப்படுகின்றது.
மே 20 22:45

அரச ஊழியர்களின் எண்ணிகை 13 பேருக்கு ஒருவர், இதுவே பாரிய சிக்கல் என்கிறார் அலி சப்ரி

(வவுனியா, ஈழம்) ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படட தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சூடான விவாதம் நடைபெற்றது. வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென அரசதரப்பு உறுப்பினர்களான அஜித் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பென்சேகா. ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
மே 13 13:57

சிங்கள பௌத்த தேசத்துக்குள் எழும் மோதல்கள், ஒற்றையாட்சி மரபின் தொடர்ச்சிக்கு உரமூட்டுகின்றன

(கிளிநொச்சி, ஈழம்) ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைகள் சர்வதேச மட்டத்தில் அதிகளவு பேசப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், சிங்கள பௌத்த தேசம் ஏதோவொரு வகையில் தன்னை மீளக் கட்டமைக்கின்றது. பௌத்த தேசிய அரசியல் தலைவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் விடயத்தில் உடன்பாடாகிவிடுகின்றனர் என்பதற்கு கோட்டாபாய ராஜபக்ச முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியேற்றமை மாத்திரம் உதாரணமல்ல. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமான காலத்தில் இருந்து அந்த உதாரணங்களைக் காணலாம்.
மே 09 22:48

வன்முறையாளரைத் துணைக்கழைத்த ஆளுங்கட்சியின் கலகம் அரசியல்வாதிகளின் தற்கொலை அவலத்தில் முடிவு

(வவுனியா, ஈழம்) பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாட்களில் ஈழத்தமிழ்த் தேசம் மீது இன அழிப்புப் போரை நடாத்தியதாக ஈழத்தமிழர் தரப்புகளால் குற்றஞ்சுமத்தப்படும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத்தை அன்று வழிநடாத்திய பாதுகாப்புச் செயலரும் தற்போது முப்படைகளின் கட்டளைத் தளபதியாகவுமுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதே இராணுவத்தை, இன்று பொருளாதார நெருக்கடியால் தென்னிலங்கையில் உருவாகியுள்ள கலகத்தை அடக்குவதற்கு கட்டவிழ்த்து விடுவது எப்போது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கலகம் அவலமாகியதன் உடனடி விளைவு மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி துறப்பாகியது. மொட்டுக்கட்சியினரின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.
மே 09 10:12

ஒற்றையாட்சியை பாதுகாக்க முற்படும் சட்டத்தரணிகள் சங்கம்- கேள்வி எழுப்பத் தயங்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள்

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் காணும் நோக்கில், சிங்களத் தலைமைகளை மையமாகக் கொண்ட இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம், மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்கள் குறித்துத் தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைதியாக இருக்க முடியாதென்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டுமென்ற பரிந்துரை மாத்திரம் தீர்வாகாது என்ற சட்ட வியாக்கியானங்களை வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முன்வைக்க வேண்டும்.
மே 02 23:12

தேரர்களின் வேண்டுதல் நிறைவேறும்- மகிந்த விலகி புதிய பிரதமரை நியமிக்கலாம்- ரணில், சஜித் மறைமுக ஆதரவு!

(கிளிநொச்சி, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோராமல், விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்குச் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் பிரகாரம் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்படுகின்றது போல் தெரிகின்றது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிப் புதிய ஒருவர் அரசாங்கத்துக்குள்ளேயே தெரிவு செய்யப்படுவாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார். எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைப்பாரென முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏப். 25 13:12

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை இடம் மாற்றும் சதுரங்க விளையாட்டில்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட பின்னரும்கூட சிங்கள அரசியல் கட்சிகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்தல் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் புதுப்பித்து 21 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அதாவது மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளைச் சாதகமாக்கி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதிகாரங்களை அப்படியே இடம்மாற்றுகின்ற சதுரங்க விளையாட்டில் (Playing chess) ஈடுபடுகின்றன. மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
ஏப். 24 09:59

வடக்குக் கிழக்கு மக்கள் ஏன் பங்கெடுக்கவில்லை?

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் விலைவாசி உயர்வு நெருக்கடிகளினால், சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற மார் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த எதிர்ப்புப் போராட்டம், தற்போது தீவிரமமைடந்து வரும் நிலையில். வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
ஏப். 23 20:53

விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று இன்று 21 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதையடுத்து இன்று நாடெங்கிலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்ம சாந்திவேண்டி பல ஆலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாக, நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று, ஓங்கி ஒலித்த நிலையில் மேற்படி கோஷங்கள் யாவும் தற்பொழுது வலுவிழந்து அநேகராலும் மறக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.
ஏப். 13 15:54

இலங்கை அரச கட்டமைப்பை மாற்றுவதே நோக்கம் என்றால், சிங்கள மக்கள் பகிரங்கமாக அழைக்க வேண்டும்

(முல்லைத்தீவு) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள். இரண்டாவது பெருமளவு அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தி 1986 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளியமை. குறிப்பாக 1947 இல் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல். பொருளாதாரத் திட்டங்கள் இனவாத நோக்கில் அமைந்தமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்களப் பேராசிரியர் அசோக லியனகே கொழும்புரெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி எழுதிய தனது கட்டுரையில் கூறுகின்றார்.