(மன்னார், ஈழம்)
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வட மாகாணத்தில் போரினால் இடம் பெயர்ந்து இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத குடும்பங்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கழுவின் ஆலோசணைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பிடத்தக்களவு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். எனினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலக்கன்னி வெடி அகற்றப்படாமையினாலும் அவர்களின் சொந்தக் கிராமங்களை இலங்கைக் கடற்படையினரும், இராணுவத்தினரும் ஆக்கிரமித்துள்ளதாலும் மீளக் குடியேற்றப்படவில்லை.