ஒக். 07 23:01
(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். வேட்பு மனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் இரண்டு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மகிந்த ராஜபக்சவின் சகோதரரான சமல் ராஜபக்ச, குமார் வெல்கம, ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத், பஷர் சேகு தாவூத் ஆகியார் கட்டுப் பணம் செலுத்தினாலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.