நவ. 24 22:20
(வவுனியா, ஈழம்)
இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணைகளை நடத்திப் பிரபல அரசியல்வாதிகளின் பல ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் தொடர்பான பல விடயங்களை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா, அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இருந்து குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சி.ஐ.டி.யின் சமூகக் கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா, மனைவி மற்றும் மூன்று மகள்மாருடன் சுவிஸ்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.