டிச. 19 15:59
(மட்டக்களப்பு, ஈழம் )
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கவனஈர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புகள், பொது மக்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை இன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி நகரில் நடத்தினா். போராட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர்.