டிச. 31 23:16
(கிளிநொச்சி, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதியாகப் பதவி வகிக்கும் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமைப் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கை இராணுவத் தளபதி என்ற பதவிக்கு மேலதிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஈழப் போரின் போது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் விவகாரங்களில் சர்வதேச அரங்கில் பலத்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான சவேந்திர சில்வா, கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.