நிரல்
பெப். 06 23:34

நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம்- ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு காரணமா?

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதால் ஓகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தைக் கலைத்து செப்ரெம்பர் மாதம் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரமாக ஆலோசிப்பதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நான்கு ஆண்டுகள் ஆறுமாதம் நிறைவடையும்போது நாடாளுமன்றத்தைக் கலைத்து ஏப்பிரல் மாதம் தேர்தலை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பெப்ரவரி மாதம் கலைப்பதற்குக் கூட விசேட பிரேரணை ஒன்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் ஏற்பாடாகியிருந்தது.
பெப். 06 10:21

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்- ஆனால் நாடாளுமன்றத்தில் மகிந்த மறுப்பு

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட எல் வலையத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி வருகிக்றனர். இது தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்திடம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவ்வாறு சிங்களக் குடியேற்றங்கள் செய்யும் நோக்கம் இல்லையென்று கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். சிங்களப் பிரதேசங்களை மைய்யப்படுத்திய மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளைக் கூறுபோடும் நோக்கில் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கும் கொண்டு வரப்படுகின்றது.
பெப். 05 21:47

ஏ-9 வீதியில் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடி- நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்

(கிளிநொச்சி, ஈழம்) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ-9 வீதியில் இலங்கை இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைத்துப் பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு ஈபிடிபி செயலாளர், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்புத் தெரிவித்தார். சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சுட்டிக்காட்டினார். ஆனால் அப்படி எந்தச் சோதனைச் சாவடிகளும் இல்லையென்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைதியாக இருந்தார். இதனால் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் வாக்குவாதப்பட்டார்.
பெப். 05 20:46

அறு நூறு பில்லியன்கள் இழப்பு, கடன் 72 பில்லியன்களாக அதிகரிப்பு- நாடாளுமன்றத்தில் மகிந்த அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதத்தை விட குறைவாக உள்ளது. சகல உற்பத்தி துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. 600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அறவிட முடியாக் கடன் 72 பில்லியன்களாக உள்ளது. முழு பொருளாதாரமும் செயலிழந்துள்ளது. எனினும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு பத்து அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல்அமுல்படுத்தப்படுமென பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அறிவித்தார். இலங்கையின் பொருளாதார, நிதி நிலைமைகள் தொடர்பாக விடுத்த விசேட அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
பெப். 04 22:49

கோட்டாபய ராஜபக்சவின் சுதந்திர தின உரையில் இனப்பிரச்சினை பற்றிய வார்த்தையில்லை

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்காப் பொதுஜன முன்ணணி அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்திய இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸ் சேவையில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்ற அறிவிப்பைத் தவிர வேறு முக்கியமான அறிவுப்புகள் எதுவும் தமிழ் மொழியில் இடம்பெறவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய உரையில் இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதாகவோ அல்லது போரின் பின்னரான சூழலில் நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென்றோ எதுவுமே கூறவில்லை. மாறாக இன அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதென்றும் இனவாத அமைப்புகளுக்கு இடமில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தனது உரையில் கூறியிருந்தார்.
பெப். 03 22:21

இராணுவத்தின் சோதனை நடவடிக்கை, ஏ-9 வீதியில் பயணிகள் அவதி

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சோதனை, தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏ-9 வீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக முறையிடப்பட்டுள்ளது. ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் பேருந்துகள், பயணிகளிடத்தில் இராணுவத்தினர் சோதனை செய்கின்றனர். பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்தும் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பெப். 02 23:14

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடு- சஜித் தலைமையில் புதிய அரசியல் அணி குறித்த பேச்சுக்கள் தீவிரம்

(கிளிநொச்சி, ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் அணி வெற்றிபெறுமென்றும் அதற்குரிய வகையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. கொழும்பிலுள்ள சஜித் பிரேமதாஸவின் வாசஸ்தலத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணிக்கான இறுதிக்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகப் பங்காளிக் கட்சிகள் கூறுகின்றன. புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது முடிவை அறிவிக்கவில்லை.
பெப். 01 22:32

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

(வவுனியா, ஈழம்) அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன (Millennium Challenge Cooperation) (MCC) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கே இடமில்லையென்று ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறியிருந்தது. ஆனால் தற்போது அது குறித்த கலந்துரையாடல்கள் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணர்த்தன உள்ளிட்ட வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளோடு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இது தொடர்பாக வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்திருந்தாலும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்திருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 31 22:57

மகிந்த புதுடில்லி செல்வார்- உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வார்

(வவுனியா, ஈழம்) மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்று முதன் முறையாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். புதுடில்லியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். பொருளாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
ஜன. 30 10:47

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் சிங்கள அரசியல் கட்சிகள்

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடு முயற்சிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று முன்தினம் காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். இதனையடுத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இறுதிவாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஆனாலும் திகதி அறிவிக்கப்படவில்லை.