பெப். 03 22:21
(வவுனியா, ஈழம்)
வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சோதனை, தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏ-9 வீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக முறையிடப்பட்டுள்ளது. ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் பேருந்துகள், பயணிகளிடத்தில் இராணுவத்தினர் சோதனை செய்கின்றனர். பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்தும் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.