(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்தல் காலங்களில் பௌத்த குருமார் தமக்குச் சார்பான கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக விகாரை வளாகங்களுக்குள்ளும், மத வழிபாடுகளின்போதும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கடந்த தேர்தல் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அத்துடன் தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் முறையிட்டிருந்தனர். இதனடிப்படையில் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.