பெப். 27 10:34
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டின் இன்று வியாழக்கிழமை இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். 30/1, 34/1, 40/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்த நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளது. மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை தொடர்பான விவாதத்தில் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.