நிரல்
மார்ச் 10 22:43

முல்லைத்தீவில் 20 வயது இளைஞனைக் காணவில்லை

(முல்லைத்தீவு, ஈழம் ) வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இருட்டுமடு என்ற கிரமாத்தில் வசித்து வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லையெனப் பெற்றோர் முறையிட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகக் இந்த இளைஞனைக் காணவில்லையெனப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சென்ற 7 ஆம் திகதி சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.இருட்டுமடு உடையார் கட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பாக்கியராஜா விஜிதரன் என்ற இளைஞனே கடந்த 05.03.2020 அன்று முதல் காணாமல் போயுள்ளார். வீட்டில் இருந்து வெளியில் சென்று பல மணிநேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்களின் உதவியுடன் தெரி;ந்த இடங்களில் தேடியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 07 20:55

எட்டுத் தமிழர்கள் கொல்லப்பட்ட வழங்கில் மரண தன்டணை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) வடமாகாணம் யாழ்ப்பாணம்- மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொதுமன்னிப்பளிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறிலங்காப் பொதுஜன முன்னணித் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் குறித்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதாகப் கொழும்பில் பரவலாகப் பேசப்பட்டிருந்தது. ஆனாலும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படவுள்ளதாக கடந்த 2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிட சென்ற பொதுமக்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
மார்ச் 06 17:01

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழக் கட்சிகள் தீவிரம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகள் வேட்புனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தும், அந்தத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தீவிரம்காட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். தேர்தல் காலம் என்பதால் நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுவதாகவும் வடக்குக்- கிழக்கு இணைந்த தாயகம் தன்னாட்சி என்ற பேச்சுக்களை விட தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றக் கதிரைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மார்ச் 05 22:31

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த எழுத்து மூல சமர்ப்பணம்

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் நகர நுழை வாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலையக் கட்டடத்திற்கு அருகில் இருந்த போர்க்காலத்துக்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதை குழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து மன்னார் சதோச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காணாமல ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 04 22:22

இன அழிப்பை முன்னிலைப்படுத்தி சுயாட்சி அதிகாரத்தை தமிழர்கள் பெற வேண்டும்- சட்டத்தரணி காண்டீபன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை தகவல்களைப் பெறுவதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்திருந்தது. அந்தக் குழு இலங்கைக்கு வரவேயில்லை. அந்த குழுவுக்கு முன்பாக எவரும் சாட்சியங்கள் கொடுக்கவும் இல்லை. ஆகவே தகவல் சேகரிப்பு மாத்திரமே நடந்துள்ளது. சத்தியக் கடதாசிகள். நவீன தொழில் நுட்ப முறைகளினூடாகப் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கைகளைக் காண்பித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் சர்வதேச விசாரணை நடந்ததாகக் கூறுகிறாரென சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான காண்டீபன் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
மார்ச் 03 22:47

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை விகாரைகளில் நடத்த முடியாது- மகிந்த தேசப்பிரிய

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்தல் காலங்களில் பௌத்த குருமார் தமக்குச் சார்பான கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக விகாரை வளாகங்களுக்குள்ளும், மத வழிபாடுகளின்போதும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கடந்த தேர்தல் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அத்துடன் தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் முறையிட்டிருந்தனர். இதனடிப்படையில் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
மார்ச் 03 13:36

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

(யாழ்ப்பாணம், ஈழம்) போர்க்குற்ற விசாரணை, தமிழ் இன அழிப்புத் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுட்டிக்காட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரி வந்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தக் கோரிக்கையை வற்புறுது்தி வந்தபோதும் அந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு கால நீடிப்பு வழங்கப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மார்ச் 02 23:49

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது- சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் அணி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி பதவிக்கு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சியின் மூத்த உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி இன்று திங்கட்கிழமை உருவாகியுள்ளது. சஜித் பிரேமதாச முன்னிலையில் ஏனைய கட்சிகள் இன்று கைச்சாத்திட்டுள்ளன. ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மையமாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணி உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச அணி கடந்த சில நாட்களாகத் தீவிரமாகப் பேச்சு நடத்தியிருந்தது.
மார்ச் 01 22:21

வடக்குக் கிழக்குத் தயாகத்தில் பிரிவினைகளை உருவாக்கப் பல சுயேற்சைக் குழுக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை நாடாளுமன்றம் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில் 19 ஆவது திருத்தச் சடடத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் முடிவில் நாளை கலைப்படவுள்ளது. சென்ற ஆண்டு நவமபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆனாலும் சாதாரண பெரும்பான்மைப் பலம் கூட இல்லாத நிலையிலும் சிறுபான்மை அரசாங்கமாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சி ஆட்சி அமைத்திருந்தது. மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் ஆட்சியமைத்து நான்கு மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது.
பெப். 28 23:09

பொதுஜனப் பெரமுனவைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும்- ரணில், சஜித் முரண்பாடு நீடிப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயற்பாடுகள் அதன் சின்னம் தொடர்பாக கூட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக ஆராயப்பட்டது. புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என சென்ற புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்மானம் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது.