நிரல்
ஏப். 13 23:16

வடக்குக் கிழக்கில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துமாறு கோரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்தம 24 மணி நேரத்திற்குள் 14 பெருக்கு கொரோனா ரைவரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று;ள்ளவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 14 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் களுத்துறை மாவட்டம் பேருவளையில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக புனானையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தவர்கள். 219 பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கொழும்பில் 45 பேருக்கும் களுத்துறையில் 44 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
ஏப். 12 22:04

வடக்குக் கிழக்கில் பாரிய தாக்கம் இல்லை- யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படலாம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு;க்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தொற்றுள்ளவர்களில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட யாழ் மாவட்டத்தில் தற்போது அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நிர்ந்தரமாகத் தளர்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏப். 10 22:55

கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்- 19 நிதியமும்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த ஊரான அம்பாந்தோட்டைப் பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கெல்ப்பிங் அம்பாந்தோட்டை என்ற பெயரில் நிதியம் ஒன்றை அமைத்திருந்தார். அப்போது ஜனாதிபதியாக சந்திரிகா பதவி வகித்திருந்தார்.
ஏப். 08 22:57

இலங்கையில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்- அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கையில் இதுவரை ஏழுபேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். கொழும்பு ஐடிச் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை ஒருவர் உயிரிழந்ததையடுத்தே உயிரிழப்பு ஏழாக அதிகரித்துள்ளது. 42 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் 139 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். களுத்துறை, அக்கரைப்பற்று, கண்டி., கேகாலை பின்னவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதென்றும் எவரும் உள்ளே வரமுடியதெனவும் சுகாதாரணப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
ஏப். 07 22:42

இலங்கைக்கு இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்பியது

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டமைக்கு இந்திய மத்திய அரசுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளர். பத்துத் தொன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு இதனை அனுப்பியுள்ளது. இவை இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசரகால சேவைக்கான மருத்துவ அன்பளிப்பு என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏப். 06 21:59

பொதுத் தேர்தலை நடத்துவதே நோக்கம்- நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது- கோட்டாபய

(வவுனியா, ஈழம்) முடிந்தவரை கொரேனா வைரஸ் பரவுவதைத் தடுத்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதே பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் அணி உறுப்பினர்களுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது இலங்கையில் உருவாகியுள்ள அவசரகால நிலைமையினால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்.
ஏப். 05 21:33

நாடாளுமன்றத் தேர்தலை மேலும் பிற்போடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் கோட்டாபய பேசவுள்ளார்

(வவுனியா, ஈழம்) இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்தும், கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வாதால் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சில கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வாதல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏப். 04 23:50

இலங்கையில் 12 பிரதேசங்கள் முடக்கம்- எவரும் வெளியில் செல்ல முடியாது

(வவுனியா, ஈழம்) கொரானா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில். இலங்கையில் இதுவரை பண்ணிரன்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. வடமாகாணம் யாழ்ப்பாணத்தில். அரியாலை, தாவடி பிரதேசம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பின் குநகர் பகுதியான களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம, பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டியின் ஒரு பகுதி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை போரத்தொட்டை ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பிரதேசங்கள் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஏப். 03 23:06

இலங்கைக்கு 128.6 மில்லியன் டெரலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சீன அபிவிருத்தி வங்கி ஐநூறு மில்லியன் அமெரிக்க டெலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கைச்சாத்திட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்ககத்துக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க ஒ்ப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சு கூறியுள்ளது. ஆரம்ப அவசரச் செயற்பாடுகளுக்காக 1.9 பில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆரம்ப கட்ட அவசர உதவிகள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான வளரும் நாடுகளுக்கு வழங்கப்படுமென்றும் உலக வங்கி அறிவித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
ஏப். 02 23:23

இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று வியாழக்கிழமை மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 251 பேர் தொற்றிருப்பதாகச் சந்தேசிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேகாலை பின்னவலைப் பிரதேசத்தில் 51 குடும்பங்கள் நேற்றுப் புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை மேலம் அதிகரிக்கலாம் என்று இலங்கை மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.