ஏப். 23 23:35
(வவுனியா, ஈழம்)
கொழும்பின் புநகர் பகுதியான வெலிசறையில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்ட போதைப் பொருட்களுடன் தொடர்புடைய கொரோனா வைரஸ் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக கடமையில் ஈடபட்டிருந்தபோதே கடற்படையினருக்குத் தொற்று ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளதென, தமிழினப் படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முகாமில் இருந்த அனைத்துக் கடற்படையினருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு வரைஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.