நிரல்
மே 29 16:22

நாடாளுமன்றத் தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்படலாம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து செல்கிறது. தோ்தலை நடத்த மேலும் மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படக் கூடிய நிலை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று எட்டாவது நாளகவும் நடைபெற்ற நிலையில் அந்த விசாரணை மேலும் நீடிக்கப்படலாமென அமைச்சர்கள் சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையிலேயே தேர்தல் மேலும் மூன்று மாதங்கள் வரை பிற்போடப்படலாமென கோட்டாபய ராஜபக்ச கூறியதாக அறிய முடிகிறது.
மே 26 23:03

ஆறுமுகன் தொண்டமான் கொழும்பில் காலமானார்

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமாகிவிட்டார். கொழும்பின் புநகர் பகுதியான தலங்கம பிரதேசத்தில் உள்ள அமைச்சருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தில் மயங்கி விழுந்த நிலையில் தலங்கம பிரதேச வைத்தியசாலையில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அவரது அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மே 26 15:41

ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள்

(யாழ்ப்பாணம், ஈழம்) அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் பதிவு இலக்கம் இல்லாமல் சட்டத்தரணியாகப் பணியாற்ற முடியாது. பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த சங்கங்கள் மூலமான அங்கீகாரம் இன்றி அந்தத் தொழில் ஈடுபட முடியாது என்றவொரு விதி உண்டு.
மே 25 23:45

கொழும்பு, கம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு- போக்குவரத்துகள் இல்லை

(வவுனியா, ஈழம்) இரண்டு மாதங்களின் பின்னர் நாளை செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கச் சட்டம் தளர்த்தப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுப் பின்னர் கொழும்பு, கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஊரடங்குச் சட்டத் தளர்த்தப்பட்டாலும் கொழும்பில் இருந்து கம்பகா தவிர்ந்த ஏனைய வெளி மாட்டங்களுக்கு எவரும் செல்ல முடியாதென்றும் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்தள்ளது.
மே 23 23:06

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இராணுவ அதிகாரி தலைமையில் செயலணி

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில். விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏலவே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு பௌத்த விகாரைகளும் கட்டுப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட செயலணி குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணை;ப்பாளர் தா்மலிங்கம் சுரேஸ். தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மே 22 20:37

நாடாளுமன்றத் தேர்தல்- கட்சிகளிடம் ஆலோசனை கோரல்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக இழுபறி நிலை நீடித்துச் செல்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை முன்வைக்குமாறு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாகச் சந்தித்து ஆலோசனை வழங்குமாறு அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். சுகாதாரத் திணைக்களத்துடன் பேச்சு நடத்த முன்னர் ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மே 21 23:25

ஐக்கிய தேசியக் கட்சியும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

(வவுனியா, ஈழம்) நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலைத்தமை தொடர்பான அரச வர்த்த மானியை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஜீன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று நான்கவது நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவன்ச இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மே 20 23:09

யூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது- உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்திறகு; அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று மூன்று நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தலை நடத்தக் கூடிய சுகாதாரச் சூழல் இல்லையென தேர்ல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்ற நீதியரசர்களிடம் இந்த அறிவித்தலைக் கைளளித்தார்.
மே 19 21:09

வடக்குக்- கிழக்கு மாகாணங்களை இணைக்க சர்வதேச நீதிமன்றத்தை ஏன் நாட முடியாது?

(யாழ்ப்பாணம் ) இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டது. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இலங்கையில் எட்டு மாகாண சபைகள் அன்று உருவாக்கப்பட்டிருந்தன. 1987ஆம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்த மாகாண சபை முறை உருவானது என்பது வரலாறு. ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வாக அன்று இந்த மாகாண சபைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவ்வாறானதொரு சூலிலேதான் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியைத் தூண்டிவிட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்வித்திருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. (போரை நடத்த ஜே.வி.பி அப்போது மகிந்த ராஜபக்சுவுக்குப் பக்கபலமாக இருந்தது)
மே 18 23:41

இனப்படுகொலைக்கு நீதிகோரி முள்ளிவாய்காலில் மக்கள் ஒன்று கூடல்

(முல்லைத்தீவு, ஈழம் ) ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் செய்யப்பட்டமைக்கான நீதி பதினொரு ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் கிடைக்கவில்லையென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்கள் கவலை வெளியிட்டனர். சர்வதேசம் நீதயைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் இலங்கை இராணுவம் கடுஐமயான தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தும் மக்கள் துணிவோடு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளைப் பின்பற்றி மக்கள் பங்கெடுத்தனர்;. துமிழ்த் தரப்பு அரசியல் பிரதிநிதிகள் பலர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டனர்.