(வவுனியா, ஈழம்)
ஒற்றையாட்சி அரசின் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் அரசசார்பற்ற நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. அரச திணைக்களங்கள். அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றுக்குச் சொந்தமான வாகனங்கள், தளபாடங்கள், மண்டபங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது காபாந்து அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் இவ்வாறு அரச வளங்களைத் துஸ்பிரயோகம் செய்வதாகவும் தேசிய சமாதானப் பேரவை, மாற்றுக் கொள்கை மையம் ஆகிய நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.