(மன்னார், ஈழம் )
வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் தீவில் அமைந்துள்ள ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்கு எனும் புதர்களும் பனை மரங்களும் அடர்ந்த வனப்பகுதி, செல்வந்த தொழில் அதிபர் ஒருவரினால் கடந்த ஒரு வருடமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுவரும் நிலையில், உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ அதையிட்டுக் கவனம் செலுத்தாதவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு பிரதேச அரசியல்வாதிகளும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செல்வந்தரின் சட்டவிரோத காடழிப்புத் தொடர்பாக மௌனமாக உள்ளதாக ஒலைத்தொடுவாய் தமிழ் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கவலை வெளியிட்டனர்.