நிரல்
ஓகஸ்ட் 04 22:13

அதிகரிக்கும் கொவிட் தொற்று- இன்று 2543 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் அதி தீவிரமாக கொவிட்-19 நோய்த்தொற்று பரவிவரும் நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளது. இன்று புதன்கிழமை 2543 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 03 22:18

கொவிட் தொற்றுக்கு ஒருநாளில் 74 பேர் உயிரிழப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கைத்தீவில் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்துகளை மீண்டும் உடனடியாக நிறுத்திக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாத்திரம் கொவிட் மற்றும் டெல்ரா தொற்றுக்களினால் பாதிக்கப்பட்டு 74 பேர் உயிரிழந்துள்ளனர். சென்ற முதலாம் திகதியில் இருந்து போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் நெருக்கமாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் செல்வதை அவதானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 03 20:38

மன்னாரில் கொவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை கொவிட்- 19 நோய்த் தொற்றினால் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இதனால் மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார். கொவிட் தொற்றினால் பீடிக்கப்பட்ட களுத்துறையைச் சேர்ந்த குறித்த பெண் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள் இரவு இவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே செவ்வாய் காலை இவர் மரணமடைந்ததாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 02 23:02

அதிகரிக்கும் டெல்ரா வைரஸ்- சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கொவிட் மற்றும் டெல்ரா வைரஸ் போன்ற பல திரிபுகள் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கேமந்த கேரத் தெரிவித்துள்ளார். நேற்று முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியர் கேமந்த கேரத் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஓகஸ்ட் 01 22:22

மன்னாரில் தடுப்பூசிகளை பெற இளைஞர்கள் பின்னடிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் -19 ற்கான பைசர் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சமயம் மாவட்டத்தில் வதியும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 25 சதவீதமானோர் குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான வைத்திய அதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஓகஸ்ட் 01 13:21

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர் மூழ்கியிருக்கிறார்கள். இந்த ''இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மான மாநாட்டின்'' உள்ளடக்கம் என்ன வடிவம் எடுக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதை முற்கூட்டியே ஈழத்தமிழர் சமூகம் ஆராய வேண்டும். ''வட்டுக்கோட்டை நமஹ, இந்தோ-லங்கா ஒப்பந்த நமஹ, பதின்மூன்று நமஹ'' என்று பயணிக்கவும் ''சுயநிர்ணயம்'' பேசலாம் என்ற மூடுமந்திரமாக அது இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்பதே ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.
ஜூலை 31 22:29

அவர் அறிந்த மொழிதான் அவரைக் கொன்றது

(வவுனியா, ஈழம்) சில வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு காலையில் நான் பஸ்சில் கடைசி வரிசை ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது கையில் ஒரு புத்தகம் இருந்தது. இடையில் நிறுத்தமொன்றில் ஏறிய பயணிகளுள் வயதான ஒரு பெண்மனியும் இருந்தார். அவருக்கு நான் சற்று நகர்ந்து உட்கார இடமளித்தேன். முகபாவனையால் எனக்கு நன்றி தெரிவித்த அவர் என் கையில் இருந்த புத்தகத்தினைப் பார்த்துவிட்டு சரளமான ஆங்கில மொழியில் நான் அதிகமாகப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவனா என என்னிடம் கேட்டார். நேரம் கிடைக்கையில் வாசிப்பவன் என்று பதிலளித்தேன். அவரின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. “எனது கணவரும் நிறையப் புத்தகங்கள் வாசிப்பார். அவரின் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி ஆற்றல் அபாரமானது” எனக் கூறினார்.
ஜூலை 31 22:15

ஒற்றையாட்சி அரசின் வடமாகாணத்திற்கான புதிய ஆளுநர்?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கை நிருவாக சேவையில் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் வட மாகாண சபைத் தலைமைச் செயலாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன. வட மாகாணத்தின் தலைமைச் செயலாளராகச் சிங்கள அதிகாரியொருவர் நியமிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்த நிலையில் அவற்றில் இருந்து மீள்வதற்கான தந்திரோபாய நடவடிக்கையாகவே வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 30 21:27

சிறுமியின் சடலம் நீதிபதி, சட்ட மருத்துவர்கள் முன்னிலையில் மயானத்தில் இருந்து எடுக்கப்பட்டது

(வவுனியா, ஈழம்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் சிறுவர் உரிமை சட்டத்தை மீறி தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா டயகம மேற்கு தோட்டத்தை்ச் சேர்ந்த 16 வயது சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. சென்ற மூன்றாம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளாகி, கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 15 ஆம் திகதி சிறுமி உயிரிழந்தார். இந்த நிலையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற உத்தரவில் சிறுமியின் சடலம் டயமக மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான நிலையில் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
ஜூலை 30 21:10

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லை - உறவினர்கள் கவலை தெரிவிப்பு

(மன்னார், ஈழம் ) போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச நாடுகளே எமக்கான உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள இத்தருணத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எம்மை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி திருமதி இமானுவேல் உதயச்சந்திரா தெரிவித்தார்.