(வவுனியா, ஈழம்)
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்திற்குள் பொதுத் தலைமைத்துவம் ஒன்றை வழங்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எதிர்க்கட்சிகளின் பொதுத் தலைவராகச் செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்தக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரோடும் உரையாடியுள்ளார்.