(மன்னார், ஈழம்)
இலங்கை தீவின் அனைத்துப் பகுதிகளும் கொவிட்-19 நோய் தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் டெல்டா பிறழ்வு ஆகியவற்றினால் பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. இன்று திங்கட்கிழமை 16ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மூத்த அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல் . பீரிஸ், ஹெகலிய ரம்புக்வெல, தினேஷ் குணவர்த்தன, பவித்திரா வன்னியராச்சி, டளஸ் அழகபெரும, காமினி லொகுகே மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.