(மன்னார், ஈழம்)
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் -19 நோய்த் தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் நிலையில், வட மாகாணத்தில் இயங்கிவரும் பல கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிவதனால், மன்னார் மாவட்டத்தில் மேலும்
ஒரு கொவிட்- 19 இடை நிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளிலேயே குறித்த கொவிட்-19 இடைநிலைச் சிகிச்சை நிலையமொன்று இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகிறது.