நிரல்
ஒக். 05 10:44

திருகோணமலையில் புதிய எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க முடியாதென்கிறார் அமைச்சர் கம்மன்பில

(வவுனியா, ஈழம்) திருகோணமலை எண்ணெய் வளாகத்தில் புதிய எண்ணெய் தாங்ககளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்திய இலங்கையுடன் பேசி இணக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் அமைச்சரான உதயகம்பன்பில அதற்கு எதிர்ப்புத் வெளியிட்டுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஒக். 04 22:39

மன்னாரில் கைதான இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் மரணம்

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளம் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளதினால் இறந்தவரின் குடும்பத்தினர் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸாரே பிரஸ்தாப நபரை அடித்து கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இறந்தவரின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒக். 03 22:33

நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்கும் செயற்திட்டம்- சட்டத்தரணிகளின் பெயர்கள் வெளியீடு

(வவுனியா, ஈழம்) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கும் அணுகுமுறை ஒன்றைக் கையாண்டு வரும் தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் இரண்டாவது அறிக்கையில் ஐவர் கொண்ட சடடத்தரணிகள் குழுவின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத் தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம் குறித்து இன்று தங்கட்கிழமை மாலை இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளை, அல்லது கூட்டமைப்பு மற்றும் முன்னணிகளை, கட்டமைப்பு ரீதியாக இணைக்கும் முன்னெடுப்பாக விளங்கிக்கொள்ள வேண்டாமெனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒக். 03 20:12

பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்- ஆளுநர் உட்பட ஏழுபேருக்கு நீதிமன்றம் கட்டளை

(மன்னார், ஈழம்) மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் (Writ of Mandamus) பிரதிவாதிகளாகக் குறிப்பிடப் பட்டுள்ள வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட எழுவரை எதிர்வரும் 27ஆம் திகதியன்று மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீரின் ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை காரணமாக, அது குறித்து வட மாகாண ஆளுநருக்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி வட மாகாண ஆளுநரினால் அவரின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
ஒக். 02 09:34

ஜயசுந்தர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளாராகவும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய பி.பி ஜயசுந்தர அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்புக்குத் திரும்பியதும் ஜயசுந்தர பதவி நீக்கப்படுவாரென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.
ஒக். 01 09:26

கொவிட் தடுப்பு நடவடிக்கை- புதிய விதிகள் அமுல்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கைத்தீவில் கொவிட் 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்குப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதில் இருந்து இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட சான்றிதழ் அட்டைகள் வைத்திக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நடைமுறை தற்போதைக்கு அமுலுக்கு வராதெனவும் இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
செப். 30 21:52

மன்னாரில் படையினர் திடீர் சோதனை நடவடிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் இராணுவத்தினரால் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொவிட் - 19 நோய் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக பல வாரங்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப் படுத்தல் ஊரடங்கு நாளை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தளர்த்தப்படும் நிலையில் இலங்கை இராணுவத்தினரால் மன்னார் நகரில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளினால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 29 22:18

மீண்டுமொரு தாக்குதலா? உரிய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு பேராயர் இல்லம் வேண்டுகோள்

(யாழ்ப்பாணம், ஈழம்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இலங்கைத் தீவில் உள்ள தேவாலயங்கள் மீது நடத்தப்படுமென இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பில் உள்ள பேராயர் இல்லம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புத் தவறானதென பின்னர் இலங்கைக் கடற்படைத் தலைமைப் பீடம் கூறியதோடு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் அது குறித்து மன்னிப்பும் கேட்டிருந்தது.
செப். 28 22:17

பதவி நீக்கத்துக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் மனு

(மன்னார், ஈழம்) வட மாகாண ஆளுநரினால் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்புரிமையில் இருந்தும் தான் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் இன்று 28ஆம் திகதி செவ்வாய் மாலை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். புதிய தவிசாளர் தெரிவிற்கான விசேட அமர்வு நாளை புதன்கிழமை காலை மன்னார் பிரதேச சபை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் தவிசாளரால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செப். 28 20:19

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நாளை

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகப் பணியாற்றிய சாகுல் கமீட் முகம்மது முஜாகீர், அவரின் பதவியைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் ஒழுங்கீனமாகச் செயற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் வட மாகாண ஆளுநரினால் கடந்த 14 ஆம் திகதி தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன் பிரதேச சபை உறுப்புரிமையிலும் இருந்து நீக்கப்பட்டார்.