ஒக். 10 21:46
(மன்னார், ஈழம்)
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வருட காலபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் காலபோகத்திற்கான உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருட பெரும்போக நெற்செய்கைகளில் ஈடுபடும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், இலங்கையில் தற்போது நிலவும் பாரிய உரத் தட்டுப்பாடுகளுக்கு விரைவில் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வட மாகாண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.