செப். 22 18:30
(மன்னார், ஈழம்)
இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கள்ளியடியில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட நால்வர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கள்ளியடி கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனின் மர்ம மரணம் தொடர்பாக இறந்த சிறுவனின் தாயார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த 16, 17 , 18 மற்றும் 20 வயதுடைய நால்வரை கடந்த சனிக்கிழமை மாலை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்திருந்தனர்.