செய்தி: நிரல்
செப். 22 18:30

மாந்தை மேற்கில் சிறுவன் மரணம்- சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கள்ளியடியில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட நால்வர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கள்ளியடி கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனின் மர்ம மரணம் தொடர்பாக இறந்த சிறுவனின் தாயார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த 16, 17 , 18 மற்றும் 20 வயதுடைய நால்வரை கடந்த சனிக்கிழமை மாலை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
செப். 21 23:07

கம்பகா மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் இணக்கம்

(மன்னார், ஈழம்) கொழும்பின் எல்லை மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய பிரதேசத்தின் ஒரு பகுதியை எரிபொருள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமைக்குக் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றுள்ளவேளையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
செப். 20 22:55

நீதி நிறுவனங்களின் பணிகளை வெளியகப் பொறிமுறையால் மாற்றவோ கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாது- பீரிஸ்

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் இருக்கின்ற உள்ளூர் நீதி நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை மேலும் உரிய முறையில் செயற்படுத்தப் போதிய நடைமுறைகள் இல்லை. ஆனால் அதற்காக இந்த நிறுவனங்கள், அமைப்புகளின் பணிகளை வெளியகப் பொறிமுறைகளினால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ இடமளிக்க முடியாதென வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபை பரிந்துரைத்துள்ள வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாதென அமைச்சர் அடித்துக் கூறியுள்ளார்.
செப். 18 19:15

மன்னாரில் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் பரிசோதிக்க முடிவு

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வீதிச் சோதனைச் சாவடிகள் ஊடாக பயணிக்கும் பொது மக்கள் தமது கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டைகளைப் படையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடும் வகையில் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனும் புதிய நடைமுறை கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் மன்னாரில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 30 தொடக்கம் 60 வயதுடைய பெருமளவானோர் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செப். 17 09:44

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவு முழுவதிலும் தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்டு வருகின்றது. 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படவிருந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமற்ற முறையில் மதுபானச்சாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்ததால் இலங்கைத்தீவின் அனைத்து மதுபானச் சாலைகள் முன்பாக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
செப். 16 20:44

தலை மன்னாருக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட போதைப் பொருள்

(மன்னார், ஈழம்) இலங்கை தீவில் கொவிட் - 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி மிகத் துணிகரமாக இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்ட சுமார் எட்டு கோடி பெருமதியான ஜஸ் எனப்படும் போதைவஸ்து அடங்கிய பொதிகள் சென்ற செவ்வாய் நள்ளிரவு தலைமன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஐஸ் போதைவஸ்தினை கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப். 14 22:32

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுத் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்ட இலங்கை விசேட வர்த்தமானியில் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸினால் குறித்த பதவி நீக்க அறிவித்தல் பிரசூரிக்கபட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் இவரின் பதவி வரிதாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படடுள்ளது.
செப். 12 20:53

வவுனியாவில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கொவிட்- 19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் இம் மாவட்டத்தில் கொவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். வவுனியா மாவட்ட மக்கள் கொவிட் நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தொடர்ச்சியான அசமந்த போக்கு காரணமாக கொவிட் நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கொவிட் தொற்றினால் இம் மாதம் 11ஆம் திகதிவரை வவுனியா மாவட்டத்தில் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செப். 12 11:04

மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து வீ.டி.லக்ஸ்மன் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், தற்போதும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராகவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் பதவி வகிக்கின்றார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 10 13:55

இலங்கை செல்ல முற்பட்ட பெண் கைது

(மன்னார், ஈழம்) இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்ட இளம் யுவதியொருவர் கடலோரப் பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்தியப் பெண்ணொருவர் உட்பட மேலும் நால்வரைக் கைது செய்துள்ளதாக இராமேஸ்வரம் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.