ஒக். 11 23:06
(மன்னார், ஈழம்)
காணி உத்தியோகத்தராகவும், உதவி காணி ஆணையாளராகவும் சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் அரச சேவையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி, மக்களுக்கு பெரும் சேவையாற்றிய பேதிறு அந்தோணி மார்க் தனது 78வது வயதில் மரணிக்கும் வரை, குடியிருப்பதற்குத் தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் மன்னார் நகரின் பல இடங்களிலும் வாடகை வீடுகளிலேயே வசித்த நல் மனம் படைத்த மனிதரென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தெரிவித்தார்.