ஒக். 22 21:53
(மட்டக்களப்பு, ஈழம்)
விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் விவசாயகளுக்கு உரம் வழங்க வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.