நிரல்
டிச. 13 22:53

அரசாங்கத்தின் மீது பேராயர் பகிரங்கக் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் காரசாரமான தொனியில் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் பொறுப்பான பதில் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்ததாகவும் ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை என்றும் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் கூறினார்.
டிச. 12 23:15

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

(முல்லைத்தீவு) அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.
டிச. 11 15:19

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

(கிளிநொச்சி, ஈழம்) போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுகிறது. இலங்கை இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல, இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.
டிச. 10 19:45

அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைந்தது

(யாழ்ப்பாணம், ஈழம்) தற்போதைய சூழலில் கையில் இருக்கும் இலங்கையின் அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அந்நியச் செலவாணியே கையிருப்பில் உள்ளதென்றும் விஜேவர்த்தன கூறியுள்ளார். மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
டிச. 08 14:22

பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுக் காரணமாக பேசாலை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாத நிலையில் குறித்த பெருவிழா இன்று புதன்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது. மேலும் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னான்டோ சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.
டிச. 07 19:03

ரணில் கேள்வி- பசில் திடீரென டில்லிக்குச் சென்றது ஏன்?

(யாழ்ப்பாணம், ஈழம்) நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்குச் சென்றமைக்கான காரணம் என்னவென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வரவு - செலவுத் திட்டக் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி தொடுத்தார். வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எந்தவொரு நிதி அமைச்சரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில்லை. ஆனால் இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.
டிச. 06 10:08

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி

(வவுனியா, ஈழம்) வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் முயற்சி எடுத்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. விமல் வீரவன்ச, தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஆறு பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
டிச. 05 22:02

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- இளைஞன் கைது

(மன்னார், ஈழம்) இலங்கைத்தீவில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த வியாழனன்று இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல ஹிங்குல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயது நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
டிச. 05 11:07

முல்லைத்தீவுக் கடலில் மூன்று இளைஞர்கள் பலி

(முல்லைத்தீவு) வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வாகனம் ஒன்றில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்குச் சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
டிச. 04 19:58

எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்துள்ளதாக எச்சரிக்கை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கும் இந்தியா தமிழ் நாட்டு பகுதிக்கும் இடையில் சட்டவிரோதக் கடல் வழி மூலமாக அடிக்கடி இந்தியாவிற்கு பயணிப்பவர்களினால் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை 2ஆம் திகதி நடைபெற்ற விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியவேளையே அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.