டிச. 06 10:08
(வவுனியா, ஈழம்)
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்து அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்கப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் முயற்சி எடுத்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
விமல் வீரவன்ச, தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஆறு பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, உள்ளிட்ட சில உறுப்பினர்களுடன் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.