நிரல்
மே 23 21:32

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் நகல் வரைபு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கான நகல் வரைபு இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 21 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழு தயாரித்த பரிந்துரைகளே நகல் வரைபாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கவனத்துக்கும் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டு முழுமையான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மே 21 21:05

மீள் எழுச்சி பெறப்போகும் சிங்கள மேட்டுக்குடி அரசியல்- சர்வதேச அரங்கில் மீண்டும் தமிழ்த்தேசத்துக்கு வரப்போகும் ஆபத்து

(முல்லைத்தீவு) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குப் பதவியில் இருந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துக்களை மறுத்துரைக்க முடியாது. ஊழல்மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் நீடிப்பதற்கும் அவை இலங்கை அரசின் ஒரு பகுதிபோன்று மாறுவதற்கும் முப்பது ஆண்டுகால போர் வழிவகுத்து என்பதே மூல காரணம். ஆனால் இதனைச் சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள முற்போக்குவாதிகள் பலரும் ஏற்க மறுத்துள்ளதொரு சூழலில் சிங்களச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது முற்கால அரசியல் நகர்வுகளை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றார். எழுபது வருடகால இனப்பிரச்சினை மடைமாற்றப்படுகின்றது.
மே 20 22:45

அரச ஊழியர்களின் எண்ணிகை 13 பேருக்கு ஒருவர், இதுவே பாரிய சிக்கல் என்கிறார் அலி சப்ரி

(வவுனியா, ஈழம்) ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுக்கு ஆதரவான உறுப்பினர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படட தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சூடான விவாதம் நடைபெற்றது. வன்முறைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென அரசதரப்பு உறுப்பினர்களான அஜித் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைக்குக் குண்டர்களை அழைத்து வந்து கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வன்முறைகள் ஆரம்பித்ததாக சரத் பென்சேகா. ஜயமான பண்டார ஆகியோர் குற்றம் சுமத்தினர்.
மே 19 09:56

மாநில அரசுகளுக்குரிய நிர்வாக அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்த தமிழக ஆளுநர் - வெளிப்படுத்திய பேரறிவாளனின் விடுதலை

(யாழ்ப்பாணம், ஈழம்) இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பேரறிவாளன் முப்பத்தியொரு ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடுதலையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் சட்ட அதிகாரத்தை புதுடில்லி ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக மாநில ஆளுநர் ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது வெளிப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ் நாட்டு மாநில அரசுக்கே உண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதோடு, தமிழ்நாட்டு ஆளுநரின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
மே 18 16:29

அரசியல் விடுதலையை உணர்த்தி நிற்கும் நினைவேந்தல் நிகழ்வு

(முல்லைத்தீவு) ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைக் கோரி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் திருகோணமலை தென்கையிலை ஆதின முதவர் தவத்திரு அகத்தியர் அடிகளார், அருட்தந்தை லியோ அடிகளார் ஆகிய இருவரும் முன்னிலை வகித்தனர். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்றினர். உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில், போரில் கொல்லப்பட்டவர்களை நினைகூர்ந்து உறவினர்கள் கதறி அழுதனர்.
மே 18 11:01

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(வவுனியா, ஈழம்) முதன் முறையாக இந்த ஆண்டு கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலகுமாறு கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாகக் கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் இளைஞர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். சிங்கள இளைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பினரும் நிகழ்வில் பங்குகொண்டனர். காலிமுகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
மே 17 22:10

மகிந்தவுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முன்னாள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீண்டகாலமாக அமைச்சர்களாகவும் பதவி வகித்திருந்தனர். காலி முகத் திடலில் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்தில் பங்குகொண்டிருந்த இளைஞர்களைத் திட்டமிட்டுத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 16 22:34

பாரிய பொருளாதார நெருக்கடி- ரணில் எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தியாகங்களைச் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இரண்டாயிரத்து 300 பில்லியன் ரூபா வருமானம் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதன் உண்மை வருமானம் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனம் மூவாயிரத்து 300 பில்லியன் ரூபா என்று காண்பிக்கப்பட்டிருந்தாலும் அரசாங்கத்தின் முழுமையான செலவீனம் 4000 பில்லியன் ரூபா எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மே 16 13:45

இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

(யாழ்ப்பாணம், ஈழம்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது வெறுமனே போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூருவது மாத்திரமல்ல. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டத்திலும் அதற்கு அடுத்த முப்பது வருடகால போரிலும் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களின் தியாகத்திலும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வதேச ஏற்பாடாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைதல் வேண்டும். சுனாமி பேரலையில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருதல் என்பது பொது நிகழ்வு. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கானது. தமிழ் இன அழிப்புப் பற்றிய சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ஒருமித்த குரலாக முன்வைக்க வேண்டிய கூட்டு நினைவேந்தலாகும்.
மே 15 20:26

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மைத்திரி ஆதரவு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதென, முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஆதரவு வழங்குவது தொடர்பான கடிதம் ஒன்றை மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளார். ஆதரவு வழங்குவதோடு, அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.