(வவுனியா, ஈழம்)
கொழும்பில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் உரையாடிய பின்னரே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். இன்று புதன்கிழமை இரவு அரச தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்த 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.