(கிளிநொச்சி, ஈழம்)
சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாதொழிக்க முடியாது. அது நிலையானது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிங்கள,பௌத்த அதிகாரம் நிலையானது. என்பதே யதார்த்தமான உண்மையும்கூட என்று கூறிய தேரர், சிங்கள, பௌத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததாகவும், அதனாலேயே அவரைப் பதவி விலக வைப்பதற்குச் சிங்கள, பௌத்த சக்திகள் முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்ததேசிய சக்தி இத்துடன் முடிந்துவிட்டதாகவும் தேரர் கூறினார்.