(வவுனியா, ஈழம்)
கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட தளத்திலிருந்து போராட்டகாரர்களை வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறிப்பிட்ட சில போராட்டக்காரர்கள் வெளியேறி வரும் நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலினால் மேலும் போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையடுத்துப் போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூடாரங்களும் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில். பொலிஸார் ஒலி பெருக்கியில் வெளியிட்ட அறிவிப்பினால் சீற்றமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.