நிரல்
நவ. 20 22:14

ஒற்றுமையில்லை என்பதன் பின்னால் உள்ள அரசியல்

(வவுனியா, ஈழம்) ஈழத்தமிழர்களை முடிந்தவரை இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் இணைந்து வாழக்கூடிய அளவுக்குச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்கேய்ம் போன்றவர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஊடாக திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களுக்கு பின்னால் இலங்கை அரசாங்கம் மிக நுட்பமாகச் செயற்பட்டு வருகின்றது. 2009 போருக்கு முன்னர் கையாளப்பட்ட அதே அணுகுமுறைகள் தற்போது மீண்டும் வெவ்வேறு அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் ஊடாகக் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.
நவ. 18 09:15

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கவே கூடாதென்கிறார் சரத் வீரசேகரா

(வவுனியா, ஈழம்) அரசியல் யாப்புக்கு அமைவாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாதென இலங்கை இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், ராஜபக்ச் குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிக்காக்கும் படையைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பித் தோல்வியடைந்ததாலேயே இந்தியா இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.
நவ. 17 10:32

உதவி வழங்கும் நாடுகள் கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக இணக்கம் வெளியிடவில்லை என்கிறாா் அமைச்சா்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் அரச ஊழியர் மட்டத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ள நிலையில், இறுதி ஒப்பந்தம் அரசாங்கத்துடன் செய்யப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமே அதிகாரபூர்வமானது என்றும் அமைச்சர் கூறினார். அரச ஊழியர்மட்ட ஒப்பந்தத்தில் பல பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயக்கம் காண்பித்து வந்த நிலையில். அரசாங்கம் அதிகாரபூர்வமான ஒப்பந்தத்தைச் செய்யவுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நவ. 16 09:36

இந்தியா ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதை நுட்பமாகக் கையாளும் சிங்கள ஆட்சியாளர்கள்

(முல்லைத்தீவு) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை அறவழியில் தொடர்ந்து முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைக்குச் சென்றிருந்தது. ஆனால் அதனை ஒழுங்குமுறையில் கொண்டு செல்ல முடியாமல், சிதறவைத்துக் கையாளப்படும் சக்திகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை பங்களிப்பு வழங்க வேண்டுமெனச் சம்பந்தன் கேட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருகில் இருந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தாமல், கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் வெளியேறிய நிலையில், தற்போது ஐ.நாவை நாடுகிறார் சம்பந்தன்.
நவ. 14 08:25

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி

(வவுனியா, ஈழம்) வரவுசெலவுத் திட்டத்தின் மொத்தத் தொகையில் பத்து வீதம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் இவ்வளவு தொகை எனவும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்குக் கிழக்கில் மீள் குடியேற்றம் மற்றும் உதவிகள் தொடர்பான விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நவ. 13 09:24

விடுதலையின் பின்னால் அரசியல் இல்லை- சட்டம் தன் வழி சென்றிருக்கிறது

(யாழ்ப்பாணம், ஈழம்) பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட அன்றைய தினமே நளினி உள்ளிட்ட ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தினால் வெள்ளிக்கிழமை ஆறுபேரும் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் எந்தவொரு அரசியலும் இல்லை என்பது பகிரங்கம். இந்த விடுதலைக்கு மோடி அரசாங்கமோ, தமிழகத்தில் தி.மு.க.அரசாங்கமோ உரிமை கோரவும் முடியாது முப்பது ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தைச் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை மே மாதம் 18 ஆம் திகதி விடுதலை செய்தது.
நவ. 11 21:57

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் தமிழர்களின் காணிகள் மீண்டும் அரசாங்கத்தால் அபகரிப்பு

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பரப்புக்கடந்தான் கிராமத்தில் 630 தமிழ் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் தனிநபர்களினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளில் பெரும் பகுதி இலங்கை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா சௌந்தரராசா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய கே.கணேஷின் பணிப்பின் பேரில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் காணிகள் அற்ற மக்களுக்கு பரப்புக்கடந்தான் பகுதியில் அரச காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
நவ. 10 22:56

பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் மீட்சி பெறுமென இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைத்தீவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து குறிப்பிடத்தக்களவு உயர்வடையுமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார ஒழுங்குகள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. ஆனாலும் அந்த நெருக்கடிகள் தற்போது குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நவ. 09 21:56

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் சிக்கல்- தொடர்ந்தும் உரையாடல்

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சு நடத்துவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஆனாலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவையெனவும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், நிபந்தனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
நவ. 08 21:31

ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகப் பேராயர் மல்கம் ரஞ்சித் ரணில் அரசாங்கம் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குவதாகவும் பேராயர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட பின்னர் கருத்துக்கூறாமல் அமைதிகாத்திருந்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.