(வவுனியா, ஈழம்)
எரிபொருள் சந்தை தாராளமயமாக்கல், மத்திய வங்கி திருத்தச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அங்கீகாரத்தைப் பெற்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கினர்.