நவ. 13 23:09
(மட்டக்களப்பு, ஈழம்)
நடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான இலங்கை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைத் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். இன்றிரவு இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியேர் கலந்துகொண்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்டிருந்த இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி நாடாளுமன்றம் நாளை கூடும் எனவும் சபாநாயரின் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.