டிச. 01 21:22
(கிளிநொச்சி, ஈழம்)
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை மாற்றியது முதல் தொடர்ச்சியாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக அக்கறை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தியக் கரையோர ரோந்துக் கப்பல்களான சி.ஜி.எஸ் சமர் (CGS Samar and Aryaman) மற்றும் அரய்மன் ஆகிய கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. இந்திய, இலங்கை, மாலைதீவு முத்தரப்பு ரோந்துப் பயிற்சி மாலைதீவிலுள்ள டோஸ்டி கடற்பகுதியில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியாவின் இந்த ரோந்துக் கப்பல்கள், கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளன.