ஜன. 04 22:58
(வவுனியா, ஈழம்)
தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்புப் போரைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களது காணிகளை அபகரித்துள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், வவுனியா, செட்டிகுளம் - இராமியன்குளம் பகுதியில் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் செய்வதாவும் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி குறித்த காணிகளை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.