ஜன. 02 10:12
(மட்டக்களப்பு, ஈழம்)
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட பல இளைர்களை மீட்பதில் பெரும்பாடுபட்டவரும், பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவருமான சமூக, சிவில் செயற்பாட்டாளர் அருட்தந்தை பென்ஜமின் ஹென்ரி மில்லர் புதுவருட தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர் நேற்று அதிகாலை இறையடி சேரந்ததாகவும், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.