ஜன. 04 09:15
(கிளிநொச்சி, ஈழம்)
இலங்கையில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையைத் தணிப்பதற்காக என்று தெரிவித்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆட்சி அதிகாரங்கள் நீக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சம்மந்தனிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை எனவும், அதற்காக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.