செய்தி: நிரல்
ஜன. 21 11:52

கிளிநொச்சி - பளையில் புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளி கைது - ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக குற்றச்சாட்டு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போருடன் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாகவும் ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் தெரிவித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான முன்னாள் விடுலைப் புலி போராளிகளைக் கொன்று குவித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணாமல் ஆக்கியுள்ள நிலையில், தற்போதும் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் போராளி ஒருவரைக் கைதுசெய்துள்ளது.
ஜன. 21 10:56

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 அளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜன. 21 09:45

மைத்திரியின் விஜயத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின் பின்னர் சட்டவிரோத போதைப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இதற்கு இலங்கை இராணுவமே காரணம் என தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் கஞ்சா ஹெரோயின் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்தியபளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 20 09:34

வவுனியா சிதம்பரநகர் கிராமத்தை ஆட்டிப்படைக்கும் சிறுநீரக நோய்த்தாக்கம் - கடந்த வருடத்தில் 10 பேர் பலி

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போர் காரணமாக இடம்பெயர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் இந்தியா உட்பட புலம்பெயர் நாடுகளிலும் தஞ்சமடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பி பல வருடங்கள் கடந்துள்ள போதும் குடிநீர்ப்பிரச்சனை உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை என வவுனியா சிதம்பரநகர் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தற்காலிக முகாமாக காணப்பட்ட இந்தப் பிரதேசத்தில் தற்போது அங்கிருந்த மக்கள் நிரந்தரமாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஜன. 19 23:15

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்

(வவுனியா, ஈழம் ) ஆறு வருடங்களில் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்ட பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினமன்று விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குமார் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பௌத்த பிக்குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞானசார தேரரை சுதந்திர தினம் அன்று விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் தேரா்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
ஜன. 18 23:03

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு

(வவுனியா, ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கைச் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வவுனியா சிறைச்சாலைக் கைதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 18 11:20

பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் அதி வேகத்துடன் பயணிக்கும் இலங்கை இராணுவ வாகனங்கள் - அச்சத்தில் மக்கள்

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கையால் வீதியில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட இன அழிப்பு போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களில் வீதிகளில் வேகமாக பயணிப்பதாகவும் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் பின்பற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாயகப் பகுதிகளில் இல்ங்கை இராணுவத்தினரின் வானங்களால் விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
ஜன. 18 10:01

ஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில்லியன் டொலர்களை வழங்கியது - சீன வங்கியும் உதவியளிக்க இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் இதனால் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தாக்கங்கள் ஏறப்டும் எனவும் இலங்கை நிதியமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கள் உள்ளிட்ட நிதித் தேவைக்காக அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து ஒன்பாதாயிரம் கோடி ரூபாய்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் அதிகாரி கூறினார்.
ஜன. 18 09:46

வவுனியா - நொச்சிகுளத்தில் உள்ள பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் - மாணவி வைத்தியசாலையில் அனுமதி

(வவுனியா, ஈழம்) வவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி மீது அதே பாடசாலையின் அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயங்களுக்குள்ளான மாணவி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். நேற்று முன்தினம் 16 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும் குறித்த பாடசாலை அதிபரின் மீது எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஜன. 17 15:10

அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் - முன்னாள் போராளிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தின் அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், இராணுவத்தைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் 24 பேர் கொண்ட கரும்புலிகள் அணி கொமாண்டோ தாக்குதலை நடத்தியிருந்தது.