ஜன. 22 21:19
(வவுனியா, ஈழம்)
வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு நிரந்தர மைதானத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, பாடசாலைக்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானமொன்றை வழங்குமாறு கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த போதும், இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் பண்டாரிகுளம் வீதியை மறித்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.