(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போரின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களின் போதும் இலங்கை இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துமாறும், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தமக்கு மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி வலிந்து காணாலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.