(யாழ்ப்பாணம், ஈழம் )
இந்தியா பாக்கிஸ்தான் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சு புதுடில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். நேற்று முன்னதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ கொழும்பில் உள்ள இந்தித் தூதரகமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால் சந்திப்பு இடம்பெற்றதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.