நிரல்
மார்ச் 04 22:14

நிவாரணம் வழங்க காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு- அலுவலகமே வேண்டாமென்கின்றனர் உறவுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் பரிந்துரை விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 03 23:48

வடமாகாண சபையின் தீர்மானத்தை விக்னேஸ்வரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் கையளிப்பாரா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பதால், எதுவும் நடந்துவிடாது என தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அல்லாத தமிழ்த்தரப்பு கூறுகின்றது. ஈழத் தமிழர்கள் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, கால அவகாசம் வழங்கக்கூடாது என்கிறார். ஆனால் கால அவகாசம் வழங்குவதே நல்லது என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரமங்கமாகவே தெரிவித்துள்ளார்.
மார்ச் 03 08:53

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கையின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டார் - பாகிஸ்தான் மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்தியா பாக்கிஸ்தான் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சு புதுடில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். நேற்று முன்னதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ கொழும்பில் உள்ள இந்தித் தூதரகமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால் சந்திப்பு இடம்பெற்றதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மார்ச் 01 22:28

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மார்ச் 01 10:32

இலங்கை அரசாங்கம் படையினர் தொடர்பான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்தக் கடும் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பொறுப்புக் கூறும் விடயங்களில் அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பாட்ட வழக்கு விசாரணைகள் போன்றவற்றை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் 2008/ 09ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவை கைது செய்யமாட்டோம் என்று வாக்குறுதியளிக்க முடியாதென இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன, பிரதம நீதியரசர் நலின் பெரேராவிடம் கூறியுள்ளார்.
பெப். 28 22:40

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் மனித புதைகுழி முன் கண்டன ஆர்ப்பாட்டம் - ஐ.நாவுக்கான மகஜரும் கையளிப்பு

(மன்னார், ஈழம்) ஈழத்தில் நடத்தப்பட்ட இனஅழிப்பு போர் காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகள் தமக்கு மீள வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவந்த சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித பலனுமின்றிய நிலையில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து இன்றைய தினம் மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
பெப். 28 21:36

முல்லைத்தீவில் திடீர் சுற்றிவளைப்பு - சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தல் நடவடிக்கைக்காக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூர்மை இணையத்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
பெப். 28 14:48

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழு பார்வை - பாதுகாப்புக் குறித்து உரையாடல்

(மன்னார், ஈழம்) சீன அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனாவின் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை அம்பாந்தோட்டைக்குச் சென்ற இந்தக் குழு துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டதாக அமெரிக்கத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன. அம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி அசோக விஜேசிறிவர்த்தனவையும் சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பெப். 28 09:28

பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் அனைத்தையும் இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து பாக்கிஸ்தானின் கராச்சி, லகூர் நகரங்களுக்கான விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்கு இணங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த சில நாட்களாக முரண்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலும் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதியும் மறுத்துள்ளது.
பெப். 28 07:50

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் நோக்கிலான வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழ் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அலட்டிக்கொள்ளாத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு நோக்கிய வாகனப் பேரணி நேற்றுப் புதன்னிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.