(யாழ்ப்பாணம், ஈழம் )
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசின் உயர்மட்டக்குழு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ளனர். மனித உரிமைச் சபையில் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உயர்மட்டக்குழு திருத்தங்கள் உள்ளடங்கிய கருத்துக்களை முன்வைக்கவுள்ளது.